close
Choose your channels

வேலூர் மக்களின் தாகம் தீர்க்கும் தளபதி ரசிகர்கள்

Sunday, April 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோடை தொடங்கிவிட்டதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் அதிகளவு வெப்பம் பதிவாகும் வேலூரில் சொல்லவே வேண்டாம். சாலைகளில் உள்ள தார் இளகும் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்ற வேலூரில் ஏற்கனவே பல அரசியல் கட்சிகளின் சார்பில் நீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் ஆகியவை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளையதளபதி விஜய் ரசிகர்களும் வேலூர் மக்களின் தாகத்தை தீர்க்க முன்வந்துள்ளனர். வேலூரில் உள்ள சில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் மன்றத்தின் சார்ப்பில் தண்ணீர் பந்தல், மோர்ப்பந்தல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு விஜய் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் போலவே மற்ற ரசிகர் மன்றத்தினர்களும் தமிழகம் முழுவதும் வெயில் காலம் முடியும் வரை பொதுமக்களின் தாகம் தீர்க்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.