close
Choose your channels

நயன்தாராவின் பயந்தாங்கொள்ளி கணவரா விஜய்சேதுபதி?

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறித்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் அஜய்ஞானமுத்து வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் நயன்தாராவின் கணவராக விஜய்சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், அதுவும் மிகக்குறைந்த காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளதாகவும் தெரிகிறது. நயன்தாரா இந்த படத்தில் வீரமான சிபிஐ கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அதற்கு நேர்மாறாக விஜய்சேதுபதி பக்கா பயந்தாங்கொள்ளியாக நடித்துள்ளதாகவும், கணவ்ர் விஜய்சேதுபதியை கொலை செய்யும் வில்லன்களை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் கதை தான் 'இமைக்கா நொடிகள்' என்றும் தற்போது வந்துள்ள புதிய தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ள இந்த படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.