close
Choose your channels

ஜெ.இருந்தபோது கமல் மட்டும்தான் வாயை மூடிக்கொண்டிருந்தாரா?- விஜயகாந்த் விளாசல்

Monday, July 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக கூறி வரும் அரசியல் குறித்த கருத்துக்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் புயலை கிளப்பிய நிலையில் தற்போது தமிழக அரசியல் ரஜினி, கமல் ஆகியோர்களையே சுற்றி வருகிறது.
இந்த நிலையில் ரஜினி, கமல் குறித்த அரசியல் நகர்வுகள் குறித்து இதுவரை விமர்சனம் செய்யாமல் இருந்த விஜயகாந்த் தற்போது முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை கமல்ஹாசன் அமைதியாக இருந்தது ஏன் என்று ஆளும் அதிமுக அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த விஜயகாந்த், 'ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வாயைப் பொத்திக் கொண்ருந்த கமலஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என அமைச்சர்கள் கேள்வி கேட்கிறார்களே, நீங்களும் ஜெயலலிதா இருந்தபோது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக விஜயகாந்தும் கருத்து தெரிவித்துள்ளதால் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.