close
Choose your channels

நான்காவது முறையாக விஷாலுடன் இணையும் இயக்குனர்

Friday, July 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'பாயும் புலி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பசங்க பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் விஷால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் இயக்குனர் திரு'வுடன் ஒரு படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனித, சமர் ஆகிய மூன்று படங்களில் திரு இயக்கத்தில் நடித்துள்ள விஷால், தற்போது நான்காம் முறையாக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமும் கடந்த மூன்று படங்களை போல அதிரடி ஆக்சன் படமாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் 'பாயும் புலி' படத்தின் சிங்கிள் டிராக் 'சிலுக்கு மரமே' நேற்று ரிலீஸ் ஆகி, இணையதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.