close
Choose your channels

சிம்பு குரலில் விஷ்ணு விஷாலின் ஆரம்பமும், முடிவும்!

Friday, May 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' வெற்றிக்கு பின்னர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். தற்போது அவர் 'கதாநாயகன்', பொன் ஒன்று கண்டேன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', மின்மினி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் 'கதாநாயகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கேதரின் தெரசா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் பின்னணியில் பேசும் ஒரு குரல் தேவைப்பட்டது. இதற்கு சிம்புவின் குரல் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் கருதியதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சிம்புவும் இதற்கு ஒப்புக்கொண்டதால் இந்த படத்தின் ஆரம்ப காட்சியிலும், இறுதி காட்சியிலும் சிம்புவின் குரல் ஒலிக்கவுள்ளது. இந்த தகவலை விஷணு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததோடு சிம்புவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.