close
Choose your channels

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் நடிப்பது ஏன்?

Sunday, October 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் திடீரென வருமான வரித்துறையினர்களின் சோதனை காரணமாக ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். இந்த பிரச்சனையை தீர்க்க பலர் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், இந்த படம் சுமூகமாக ரிலீஸாக உதவியதில் பெரும்பங்கு ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

குஷி, கில்லி, சிவகாசி ஆகிய மூன்று சூப்பர் ஹிட் விஜய் படங்களை இயக்கிய ஏ.எம்.ரத்னம், அதன்பின்னர் அஜீத்தின் கோட்டைக்குள் நுழைந்து ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களை தயாரித்தார். இருப்பினும், திரையுலகில் யாருக்காவது ஏதேனும் பிரச்சனை என்றால் தானாகவே முன்வந்து உதவும் குணமுடைய ஏ.எம்.ரத்னம், விஜய்யின் 'புலி' சுமூகமாக ரிலீஸ் ஆக விநியோகிஸ்தர்கள் மற்றும் ஃபைனான்சியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன்பின்னரே 'புலி' ரிலீஸ் ஆனதாகவும் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் ஏ.எம்.ரத்னம் செய்த உதவிக்கு நன்றிக்கடனாகவே விஜய் அவர் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.