close
Choose your channels

அடித்தது ஜாக்பாட்…ஒரு லாட்டரியில் ரூ.20 கோடி வென்ற இந்தியர்!!!

Saturday, September 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் லாட்டரி குலுக்கல் என்பது மிகவும் வரவேற்பு கொண்ட ஒரு விஷயமாகப் பார்க்கப் படுகிறது. காரணம் அங்கு நடக்கும் லாட்டரி குலுக்கல்களில் ஜெயிப்பவர்களுக்கு 10-12 மில்லியன் திராம் (இந்திய மதிப்பில் ரூ.20) கோடி கிடைக்குமாம். அதனால் இந்த வகையான லாட்டரி டிக்கெட்டுகளை பலரும் விரும்பி வாங்குகின்றனர். தற்போது இந்தியர் ஒருவர் “பிக் டிக்கெட் ரேபில் டிரா” லாட்டரி குலுக்கலில் ஜெயித்து 10 மில்லியன் திராம் (இந்திய மதிப்பில் ரூ.19.90கோடி) களை வென்றுள்ளார்.

பிக் டிக்கெட் ரேபில் டிரா லாட்டரி குலுக்கல்களுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் துபாயில் வசித்துவரும் இந்தியரான குர்பிரீத் சிங் (35) வாங்கிய டிக்கெட் பரிசுத்தொகையை வென்றிருக்கிறது. ஐடி மேனேஜராக பணியாற்றி வரும் இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.

மேலும் இதுகுறித்து கருத்துக்கூறிய குர்பிரீத் சிங், நான் 5 வயது குழந்தையாக இருக்கும்போதே யுஏஇ விற்கு வந்துவிட்டேன். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த அமீரகம் தற்போது நம்பமுடியாத மெகா பரிசு பணத்தையும் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நான் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன். எனக்கு கிடைத்துள்ள பணத்தை வைத்து இங்கு சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளோம். பஞ்சாபில் வாழும் எனது பெற்றோரை இங்கு அழைத்து வரப்போகிறேன் என மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார். இதேபோல அபுதாயில் கடந்த 2018 இல் நடைபெற்ற ஒரு லாட்டரி டிக்கெட் குலுக்கலில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ரூ.20 கோடியை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.