close
Choose your channels

'புலி' படத்தில் இடம்பெற்றுள்ள விஜய்யின் அறிமுகப்பாடல் வரிகள்

Saturday, August 1, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி நடிக்கும் படங்களில் அவருடைய அறிமுகப்பாடல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு படத்திலும் அவர் அறிமுகப்பாடலில் அறிமுகமாகும் ஸ்டைலே தனிதான். இதுவரை விஜய் நடித்த ஒருசில படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், அவருடைய அறிமுகப்பாடல் ஹிட் ஆகாமல் இருந்ததே இல்லை. அந்த அளவுக்கு விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் விஜய்யின் அறிமுகப்பாடல் ஒவ்வொரு படத்திலும் அமைந்து வருகிறது.


இந்நிலையில் 'புலி' படத்தில் இடம்பெற்றுள்ள விஜய்யின் அறிமுகப்பாடலின் வரிகளை தற்போது அந்த பாடலை எழுதிய வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக விஜய்யின் அறிமுகப்பாடலில் இளைஞர்களுக்கான ஒரு மெசேஜ் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் இந்த பாடலும் சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ விஜய்யின் அறிமுகப்பாடலின் வரிகள்:

பல்லவி:

எங்கமக்கா எங்கமக்கா
எந்திரிங்க எங்கமக்கா
எங்கமக்க ஒண்ணுபட்டா
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா

காத்திருக்க நேரம் இல்லடா
தெம்மாங்கு பாடும்
காத்துக்கென்ன கைவிலங்கு போடா

கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள
தம்பி தம்பி நம்பி நம்பி வாடா

கொடுமையெல்லாம் அடிபடவே
அடிமை இனம் விடுபடவே
கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க
எழுந்து வருகுதே…
ஏய் புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி

சுற்றிவரும் பகைமுடித்து
வெற்றிபெறும் வீரப்புலி
புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி

மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

*சரணம் 1:

நாடு பறிபோகலாம்
மானம் பறிபோகுமா..?
உசுரோட புலித்தோல உரிக்க முடியுமா?

வேர்வை சிந்தாமலே
வெற்றி உண்டாகுமா?
உளிபடாத பாறை ஏதும் சிற்பமாகுமா?

மண்ணை மீறாமலே
விதையும் முளைக்குமா?
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா?

எங்கள் தாய் நாட்டையே
வஞ்சம் வந்தாளுமா?
புலிக்குகையில் எலிவந்து வாலை ஆட்டுமா?

உன்னை நீ நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது

மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா
நான் விழிக்கும் போது
எனது கனவு பலிக்கவேண்டுமே

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

*சரணம் 2:

ஆந்தை பருந்துமே
வானில் பறக்குதே
அழகுமிக்க கிளிகள் மட்டும் கூண்டில் வாடுதே

எங்கள் தாய்நாட்டிலே
எல்லாம் பாழாகுதே
எங்க மண்ணும் எங்க வீடும்
ஏலம் போகுதே

சித்தம் கொதிக்குதே
ரத்தம் தீயாகுதே
யுத்தம் செய்ய வருகவென்று
சத்தம் கேட்குதே

திட்டம் இருக்கணும்
தொட்டா ஜெயிக்கணும்
நான் தொட்டுவைத்த திட்டம் ஏதும்
தோற்றதில்லையே

வானம் எப்போதும் தீர்ந்தா போகும்
வாழ்வில் நம்பிக்கை தீராதே

நாளை நம்கையில் வந்தே தீரும்
வலது காலை
எடுத்து வாடா இளைய தோழா

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.