close
Choose your channels

குழந்தையைப் போல சமத்தா… தூரியில் தூங்கும் கன்றுக்குட்டி… அசத்தல் வீடியோ!!!

Monday, December 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குழந்தையைப் போல சமத்தா… தூரியில் தூங்கும் கன்றுக்குட்டி… அசத்தல் வீடியோ!!!

 

மனிதர்கள் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளிலேயே பசு மாட்டிற்கு எப்போதும் அதிக மதிப்பு கொடுக்கப் படுகிறது. காரணம் பசு- செல்வத்தின் ஒரு குறியீடாகவே பழங்காலம் முதல் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு கன்றுக் குட்டிக்கு தூரி கட்டி அதில் சொகுசாகத் தூங்க வைக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பலருக்கும் வியப்பை அளித்து இருக்கிறது.

ஒரு விவசாயி தன்னுடைய கன்றுக்குட்டிக்கு தோட்டத்திற்கு  நடுவே தூரிகட்டி இருக்கிறார். அந்த தூரியில் ஏற தவிக்கிறது 2 மாதங்களே ஆன ஒரு கன்று குட்டி. அதைப் பார்த்த அந்தக் குடும்பம் கன்றுக் குட்டியை அழகாகத் தூக்கி அந்த தூரியில் போடுகிறது. பின்னர் அந்தக் கன்றுக்குட்டி சுகமாக தூங்குகிறது. இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

மறைந்துபோன நா. முத்துக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் பல்லேலக்கா என்றொரு பாடலை எழுதி இருந்தார். அந்தப் பாடலில் “ஆடு மாடு மேலே உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” எனும் வரிகள் இடம் பெற்று இருக்கும். அந்த வரியையே மிஞ்சி விட்டது விவசாயக் குடும்பத்தின் கன்றுக்குட்டி பாசம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.