மாலை 5 மணிக்கு “அன்பின் ஒலி“ எழுப்புங்கள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வீடியோ!!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, (மார்ச் 22) இன்று ஒருநாள் மட்டும் 14 மணிநேரம் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும், கொரோனாவுக்கு எதிராக கடுமையாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சித் துறை போன்ற அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் கரவொலி எழுப்புமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். 

இதற்காக, இன்று மாலை சரியாக 5 மணிக்கு ஒவ்வொரு பகுதியிலும் காவல் துறையினர் தங்களது வாகனங்களில் வந்து சைரனை எழுப்புவர். அப்போது கொரோனாவிற்கு எதிராக பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் கரவொலியை எழுப்பி நன்றியை செலுத்த வேண்டும்.

தற்போது, மாலை 5 மணிக்கு எழுப்ப இருக்கும் கரவொலியை “அன்பின் ஒலி“ என்ற பெயரில் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் “கொரோனாவை அழிக்கும் அறப்போராட்டத்தை அனைவரும் ஆதரிப்போம்“ எனத் தமிழக அரசு குறிப்பிட்டு இருக்கிறது. 
 

 

View this post on Instagram

#anbinoli Today 5pm #tamilnadugovt

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil) on Mar 22, 2020 at 12:17am PDT

More News

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம்!!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

சீனா இத்தாலி போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களை பலி வாங்கி வருகிறது.

தனிமை அறையில் மணிரத்னம் மகன்: வைரலாகும் வீடியோ

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தாலும் தாக்காவிட்டாலும் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுரை

ரஜினியின் வீடியோவை டுவிட்டர் நீக்கியது ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கவும் பிரதமர் மோடி அறிவித்திருந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவிற்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவிக்க கோரியும்

ரஜினியின் பதிவு தவறுதான்: தமிழ்நாடு வெதர்மேன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸை 12 முதல் 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்துவிட்டாலே