close
Choose your channels

வடகொரியாவில் என்ன நடக்கிறது??? விரிவான தொகுப்பு!!!

Monday, April 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடகொரியாவை பற்றிய செய்திகள் வெளியாகும்போது அச்செய்தியை உலக நாடுகள் புலப்படாத புதிர் என்ற ரீதியில் தான் அணுகுகின்றன. காரணம் அது உலக நாடுகளைவிட்டு எப்போதும் விலகியே இருக்கிறது. அந்நாட்டில் பல காலமாக சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறது. இதனால் ஜனநாயக முறையிலான வெளிப்படைத் தன்மையையும் எதிர்ப்பார்க்க முடியாது. அதோடு அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில வருடங்களாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத ஆராய்ச்சி போன்ற செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருவதால் அந்நாட்டை பார்க்கும்போதே உலக நாடுகள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்நடவடிக்கைகளால் பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஊடகங்கள் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன. காரணம் வடகொரியாவை நிர்மானித்த அதிபரின் தாத்தாவான கிம் 2 சங் அவர்களின் பிறந்தநாள் கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வடகொரியாவை பொறுத்தவரை இந்த நாள் மிகவும் முக்கிய தினமாகக் கருதப்படுகிறது. அதிபர் அதில் பங்கேற்கவில்லை என்றவுடன் அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.

கடந்த 11 ஆம் தேதி அதிபர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்டார். இதுகுறித்து அன்றைக்கு வடகொரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அதற்கு பின்னர் அதிபரைப் பற்றிய எந்த செய்திகளும் வெளியாகவில்லை. அதிபருக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது  எனவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்திருக்கிறது எனவும் அமெரிக்கா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், அமெரிக்க உளவு நிறுவனத்தின் தகவல்கள் அடிப்படையில் அதிபருக்கு சில ஆண்டுகளாக உடல்நலக் கோளாறுகள் அதிகமாக இருந்ததால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார் எனவும் செய்திகள் வெளியாகின.

அதிபரின் உடல்நிலை குறித்து உறுதியான தகவல்கள் எதையும் வடகொரியா அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சிறப்பு விமானம் தலைநகர் பியாங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு சிறப்பு ரயில் ஒன்று இருக்கிறது என்றும் அந்த ரயில் தற்போது அவருக்குச் சொந்தமான மாளிகைக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சேட்டிலைட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 38 நார்த் என்ற தனியார் நிறுவனம் சாட்டிலைட் மூலமாக வடகொரியவை கண்காணித்து வருகிறது. அந்நிறுவனம் ரெசார்ட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் அதிபர் கிம் ஜாங் உன்னின் குடும்பத்துக்குச் சொந்தமான ரயில் நிறுத்தப்பட்டுள்ள புகைப்படத்தை சனிக்கிழமை அன்று வெளியிட்டு இருக்கிறது.

ரெசார்ட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் வேறு எந்த ரயில்களும் நிற்காது எனவும், அச்சிறப்பு ரயில் அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பயன்படுத்தும் ரயில் எனவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வென்சான் நகரில் அதிபரின் மாளிகை இருக்கிறது. இந்த ரயில் கடந்த 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அதே ரெசார்ட் நகர் ரயில் நிலையத்தில் நின்றதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படத்தின்படி அதிபர் கிம் ஜாங் உன் தலைநகரில் இருந்து தனது சொந்த மாளிகைக்கு சென்றிருக்கலாம் எனத் தற்போது அமெரிக்க செய்தி நிறுவனங்கள செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

36 வயதான அதிபருக்கு உடல் பருமன், இதயக்கோளாறு போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கும் முன்னதாக  இதேபோன்ற இருதய கோளாறுகள் இருந்தன என்றும் கூறப்படுகிறது. அதிபருக்கு புகைப்பழக்கம் இருப்பதால், தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலக் கோளாறுகளால் மேலும் பிரச்சனைகள் அதிகமாகி அதிபர் இறந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் செய்தி ஊடகங்கள் கூறிவருகின்றன.

தற்போது அடுத்த வடகொரிய அதிபர் யார் என்ற விவாதத்தை பல நாடுகளின் செய்தி ஊடகங்கள் தொடங்கியிருக்கின்றன. அதிபர் கிம் ஜாங் உன் 20 வயதுடைய ரி சோல் ஜு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக 2012 ஜுலை 2 ஆம் தேதி வடகொரிய அரசு தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. அவருக்கு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த வாரிசு யார் என்ற விவாதத்தில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள் என்ற பரபரப்பு கிளம்பியிருக்கிறது. அதிபர் கிம் தனது அரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிபரின் தங்கை கிம் யோ ஜாங் மட்டுமே தற்போது அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர் ஆளும் கட்சியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அதிபருக்குப் பின் இவர் ஆட்சிக்கட்டிலை பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதிபரின் தம்பியான கிம் ஜாங் சவுல் மற்றும் அவரது அண்ணன் மகனான கிம் ஹன் சோல் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் மற்ற நாடுகளில் செய்தி ஊடகங்களால் நடத்தப்படும் விவாதம் மட்டுமே. இந்த விவாகாரம் குறித்து வடகொரிய அரசு எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.