close
Choose your channels

ஸ்ருதிஹாசனுடன் உண்மையிலேயே பிரேக் அப்? சாந்தனு கூறிய அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா?

Tuesday, April 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்பவரை காதலித்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சாந்தனு இது குறித்து என்ன கூறினார் என்பதை பார்ப்போம்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவரது இசை மற்றும் நடிப்பில் வெளியான ’இனிமேல்’ என்ற ஆல்பம் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது கூட தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அவர் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்பவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ஸ்ருதிஹாசன், காதலர் சாந்தனுவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதை அடுத்து இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல் சாந்தனுவும் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.

தனது காதல் பிரேக் அப் குறித்து ஸ்ருதிஹாசன் இதுவரை எந்த தகவலையும் வெளியிடாத நிலையில் சமீபத்தில் சாந்தனுவிடம் வட இந்திய ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘தயவு செய்து மன்னித்து விடுங்கள், அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை’ என்று ஒரே வரியில் பதில் கூறிவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.