அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கிய குழந்தை!!! பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒருவயது குழந்தை ஒன்று அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கியச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதேஷ்கஞ்ச் அடுத்த போகாப்பூர் பகுதியில் ஒரு வயது குழந்தை வாயில் வைத்து எதையோ விழுங்குவதை அக்குழந்தையின் தாய் பாத்திருக்கிறார். ஆனால் அவள் பார்க்கும்போதே முக்கால் வாசி குழந்தையின் தொண்டைக்குள் போய்விட்டதாகவும் இதனால் பதட்டமடைந்த அந்தபெண் உடனே அதைப்பிடித்து இழுத்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

பிடித்து இழுக்கும்போதுதான் தெரிந்திருக்கிறது அது இறந்துபோன கட்டுவீரியன் பாம்பு என்று. உடனே அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றிருக்கிறார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக விஷமுறிவு ஊசியைச் செலுத்தி குழந்தையைக் காப்பாற்றி இருக்கின்றனர்.

குழந்தை விழுங்கிய கட்டுவீரியன் பாம்பு ஆறு அங்குலம் இருந்ததாகவும் குழந்தை உண்ணும்போதே அது இறந்து இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். கட்டுவீரியன் அதிக விஷம் கொண்டது என்பதால் விஷமுறிவு மருந்து செலுத்தி குழந்தை காப்பாற்றப் பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆனால் பாம்பை விழுங்கும்போதே அக்குழந்தையின் தாய் பார்த்ததால் தற்போது குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது. இல்லையென்றால் என்னவென்று தெரியாமல் நேரம் வீணாகி இருக்கும் எனவும் மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர்.

More News

ஐந்து மாதங்களுக்குப் பின் ஓடத் தொடங்கிய மெட்ரோ ரயில்: இயல்பு நிலைக்குத் திரும்பியது சென்னை 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது

சம்யூக்தாவிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்: முடிவுக்கு வந்தது பூங்கா விவகாரம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரு பூங்காவில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும், அவர் அதிக சத்தத்துடன் பாடலை போட்டு கொண்டே

உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தகுதி இழப்பு: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதலருடன் மீண்டும் சண்டையா? ப்ரியா பவானிசங்கரின் இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானிசங்கர்,

கொரோனா பாதித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நடந்த கொடூரம்!!!

கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரே கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.