close
Choose your channels

சம்யூக்தாவிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்: முடிவுக்கு வந்தது பூங்கா விவகாரம்

Monday, September 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரு பூங்காவில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும், அவர் அதிக சத்தத்துடன் பாடலை போட்டு கொண்டே உடற்பயிற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது

இதனை அங்கிருந்த காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி கண்டித்ததாகவும், இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கவிதா ரெட்டி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கவிதா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் சம்யுக்தா ஹெக்டேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

இது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் என்றும் இதற்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கவிதா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்தார். கவிதா ரெட்டியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக டுவிட்டர் பக்கத்தில் சம்யுக்தா ஹெக்டேவும் பதிவு செய்திருப்பதால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.