close
Choose your channels

காதலருடன் மீண்டும் சண்டையா? ப்ரியா பவானிசங்கரின் இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு

Monday, September 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானிசங்கர், கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த ’மேயாதமான்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கடைக்குட்டி சிங்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடிததார். அவர் தற்போது அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரியா பவானிசங்கர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாகவும் திடீரென இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலருடன் மோதுவது போன்ற ஒரு பதிவை பதிவு செய்து உள்ளார்

அவர் இதுகுறித்து கூறியதாவது ’நாம் ஒரு நபர் மீது கோபமாக இருந்தாலும், அவரோடு நாம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கும், புகைப்படம் எடுத்தால் நமது கோபத்தை சற்று தணிக்கும் என்று நினைத்து, அவர் நம்மை ஃபோட்டோ எடுப்பார், இருந்தாலும் நான் வெடிக்க தயாராக இருக்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார். ப்ரியாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் காதலருடன் பிரச்சனையா? என்று கமெண்ட் பகுதிகளில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.