close
Choose your channels

தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான பத்து வயது சிறுவன்

Thursday, March 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாய் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவருடைய 10 வயது மகன் கொடூரமாக கள்ளக்காதலனால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் சென்னை நகரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெசப்பாகக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் - மஞ்சுளாவிற்கு ரித்திஷ் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்த நிலையில் மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுளாவிற்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசர் மற்றும் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நாகராஜ் என்பவ்ருக்கும் கள்ளக்காதல்ல் இருந்துள்ளது. இதுகுறித்து கார்த்திகேயனுக்கு தெரியவந்ததால் அவர் மனைவி மஞ்சுளாவை கண்டித்ததுடன், கள்ளக்காதலன் நாகராஜ் மீது போலீசிலும் புகார் செய்துள்ளார்

இந்த நிலையில் தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததாலும், தன் மீது போலீஸில் புகார் கொடுத்த கார்த்திகேயனை பழிவாங்குவதற்காகவும் கள்ளக்காதலன் நாகராஜ், டியூஷனுக்கு சென்ற அவருடைய மகன் ரித்தீஷை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். டியூஷனுக்கு சென்ற மகன் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் செய்ததோடு, நாகராஜ் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாகராஜனின் செல்போனை டிராக் செய்த போலீசார், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் தான் ரித்தீஷை கொலை செய்ததாக நாகராஜ் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.