close
Choose your channels

சென்னையில் மிக அதிக பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

Wednesday, April 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று பாதித்த 104 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 94 பேர் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும். இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 768ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 4 பேர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேர்களுக்கும், விருதுநகரில் இருவருக்கும் திருவாரூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இன்று புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், தமிழகத்தில் இன்று 2 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 8087 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 109,961 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos