ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ்! என்ன ஆச்சு சங்கத்தின் கட்டுப்பாடு?

  • IndiaGlitz, [Sunday,July 29 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கம் வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக மூன்று தமிழ்ப்படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அதுவும் தயாரிப்பாளர் சங்கத்தினரால் அமைக்கப்பட்டுள்ள ரிலீஸ் குழுவின் அனுமதி பெற்றே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடந்த சில வாரங்களாக வாரம் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் மட்டுமே ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் வரும் வெள்ளியன்று அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி 13 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணியார் குடும்பம், கஜினிகாந்த், காட்டு பய சார் இந்த காளி, எங்க காட்ல மழை, அழகு மகன், நாடோடி கனவு, கடிகார மனிதர்கள், கடல் குதிரை, அரளி, உப்பு புளி காரம், ஒ।.காதலனே, மற்றும் போயா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இதில் தம்பி ராமையாவின் 'மணியார் குடும்பம்' மற்றும் ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறும் வைஷ்ணவி: ஆனால் திடீர் திருப்பம்

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியேறும் நபர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது.

நேரம் வரும்போது அரசியலில் குதிப்பேன்: ஜெயம் ரவி பட நாயகி பேட்டி

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல நடிகர்களும், குஷ்பு போன்ற நடிகைகளும் அரசியலில் உள்ளனர். இந்த நிலையில் இன்னொரு நடிகை விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக பேட்டியளித்துள்ளார்.

கருணாநிதியை நேரில் சந்திக்க முடியவில்லை: நடிகர் பிரபு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக நேற்றிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்: வடசென்னை டீசர் விமர்சனம்

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடித்துள்ள 'வடசென்னை' திரைப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் கமல் பட நாயகி: புதிய போட்டியாளரா?

பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களில் ஒருவர் கூட பார்வையாளர்களை கவரவில்லை என்பதால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் புதிய அறிமுகங்கள் இருக்கும்