close
Choose your channels

15 வருடங்களுக்கு முன்பும் இப்போதும்:  இரு பிரபலங்களுடன் மகத் இருக்கும் புகைப்படம் வைரல்! 

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரண்டு பிரபலங்களுடன் 15 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப் படமும் அதே பிரபலங்களுடன் தற்போது எடுத்த புகைப்படத்தையும் நடிகர் மகத் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் இரண்டு பிரபல தயாரிப்பாளர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி ஆகிய இருவருடன் 15 ஆண்டுகளுக்கு முன் நடிகர் மகத் எடுத்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளது.

அதே இரண்டு பிரபலங்களுடன் தற்போது எடுத்த புகைப்படத்தையும் நடிகர் மகத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தோமோ அதே போல் இப்போதும் இருக்கிறோம் என்று பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் மகத் தற்போது ’கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ என்ற திரைப்படம் உட்பட மூன்று படங்களில் நடித்து வருவதாகவும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.