16 வயது சிறுமியின் நட்பும் காதலும்: காட்டில் பிணமாக கிடந்த பரிதாபம்!

  • IndiaGlitz, [Monday,January 06 2020]

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நட்புடன் ஒருவரிடமும், காதலுடன் ஒருவரிடம் பழகிய நிலையில் திடீரென காட்டுப்பகுதியில் பிணமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம் நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போனார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே காட்டு பகுதியில் ஒரு இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சென்று பார்த்த போது, காணாமல் போன 16 வயது சிறுமி தான் அந்த பெண் என்பதை கண்டுபிடித்தனர்

இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தபோது அந்த சிறுமி, மதிகுமார் என்ற 21 வயது கட்டிட தொழிலாளியிடம் நட்புடனும் இன்னொரு வாலிபருடன் காதலுடனும் பழகி உள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதிகுமார், அந்த சிறுமியை கண்டித்து உள்ளதாக தெரிகிறது இருப்பினும் சிறுமி தனது காதலை தொடர்ந்ததால் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மதி, அவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது முகத்தில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்

இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 16 வயது சிறுமி ஒருவர் இரண்டு இளைஞர்களிடம் ஒரே நேரத்தில் பழகியதால் ஏற்பட்ட விபரீதம் அந்த பகுதியில் உள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

More News

'திரௌபதி' படத்திற்கு தடையா? இலவச விளம்பரம் ஆரம்பம்!

சமீபத்தில் வெளியான 'திரௌபதி' படத்தின் டிரைலர் சமூக இணையதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தாக்கி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும்,

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த தினம் இன்று

இந்திய இசையில் புதுமைகளைப் புகுத்தி இந்திய திரையுலகை உலகளவில் அ&

சூர்யாவுக்கு மனிதநேயமே இல்லை என்று சந்தேகப்பட்டேன்: அமைச்சர் செங்கோட்டையன்

சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது என்பதையும், இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் சூரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

விமானத்தை அடுத்து ஹெலிகாப்டர்: விண்ணை தொடும் 'தர்பார்' புரமோஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் அதைவிட பிரமாண்டமாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே

அமைச்சர் முன்னிலையில் மேடையிலேயே அழுத சூர்யா: பெரும் பரபரப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த ஒரு விழாவில் மேடையிலேயே சூர்யா அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது