close
Choose your channels

விமானத்தை அடுத்து ஹெலிகாப்டர்: விண்ணை தொடும் 'தர்பார்' புரமோஷன்

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் அதைவிட பிரமாண்டமாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே

குறிப்பாக விண்ணில் பறக்கும் விமானங்களிலும் இந்த படம் பிரமோஷன் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ’தர்பார்’ திரைப்படம் வெளியாகும் ஜனவரி 9ஆம் தேதி அன்று ஹெலிகாப்டர் மூலமாக அந்த ’தர்பார்’ திரையிடும் திரையரங்கில் மலர்தூவ ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து சேலம் மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் ரஜினி ரசிகர்கள் அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’தர்பார்’ திரைப்படம் வெளியாகும் ஜனவரி 9ஆம் தேதி காலை 9 மணிமுதல் 11 மணி அந்த திரையரங்கின் முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்றைய தினம் அந்த தியேட்டரில் கோலாகலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.