close
Choose your channels

அபிராமி தியேட்டரில் புதிய முயற்சி: மற்ற திரையரங்குகளும் பின்பற்றுமா?

Saturday, July 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி காரணமாக திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.120 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.150க்கும் மேல் உள்ளது. அதுமட்டுமின்றி ஆன்லைனில் முன்பதிவு செய்தால் அதற்கு தனியாக ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங், ஸ்னாக்ஸ் எல்லாம் சேர்த்தால் ஒரு நபர் ஒரு திரைப்படம் பார்க்க ரூ.300க்கு மேல் ஆகிறது.
இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் திரையரங்குகளில் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டும் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை அபிராமி திரையரங்கம் அதிரடி புதிய முயற்சியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு குடும்பத்தில் நான்கு பேர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கு தனியாக ரூ.160 செலவு செய்யும் நிலை இனி அபிராமியில் கிடையாது. இந்த நடைமுறையை அனைத்து திரையரங்குகளும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இதுபோன்ற சலுகைகளை அறிவித்தால் பொதுமக்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.