close
Choose your channels

வீட்டுக்கு வா என அழைத்த காதலன்; நம்பி போன காதலிக்கு ஏற்பட்ட விபரீதம்!

Monday, December 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீட்டுக்கு வா என அழைத்த காதலனின் வீட்டிற்கு அவருடைய வார்த்தையை நம்பி போனால் 20 வயதுப் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் ஒரு வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தங்களது காதலின் அடுத்தகட்டம் குறித்து பேச வேண்டும், எனவே வீட்டிற்கு வா’ என காதலன் தொலைபேசியில் அழைத்து உள்ளார்

அவரை நம்பி அந்த பெண் அவருடைய வீட்டிற்குச் சென்றபோது காதலன் அந்த வீட்டில் இல்லை என தெரிகிறது. அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்து சென்ற காதலனின் பெற்றோர்கள் அவரிடம் இந்த காதலை விட்டு விடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்தப் பெண் தனது காதலில் உறுதியாக இருக்க, இதனால் ஆத்திரமடைந்த காதலனின் பெற்றோர் மற்றும் காதலனின் சகோதரன் மனைவி ஆகியோர் திடீரென அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து அந்த பெண் மீது ஊற்றி உயிரோடு கொளுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தீக்காயங்களுடன் அலறினார்

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து தீக்காயங்களால் படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலனின் பெற்றோரையும் சகோதரர் மனைவியையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்

காதலியை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து உயிரோடு தீவைத்து கொலை செய்ய முயன்ற காதலன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.