ஆக்சிஜன் தட்டுப்பாடு… ஒரே மருத்துவமனையில் 24 பேர் உயிரைவிட்ட துயரச் சம்பவம்!

இந்தியா முழுக்க நேற்று 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்கு நடுவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக சர்கங்கா ராம் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் காம்ராஜ்நகர் பகுதியில் உள்ள மருததுவமனை ஒன்றில் நேற்று மாலை சிகிச்சைப் பெற்றுவந்த 24 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர். இதில் கொரோனா நோயாளிகளைத் தவிர மற்ற நோயாளிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. காம்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு ஏற்கனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்ததாகவும் இதனால் பெல்லாரியில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பெல்லாரியிலும் ஆக்சிஜன் ஸ்டாக் இல்லாத காரணத்தால் மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 24 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து முதல்வர் எடியூரப்பா மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருடன் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ராகுல் காந்தி அவர்கள் “இறந்தனரா? அல்லது கொல்லப்பட்டனரா?” எனத் தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தற்போது இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் நோயாளிகள் அவதியுற்று வருவதும் உயிரிழந்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

More News

தந்தையின் தோல்வி குறித்து இன்ஸ்டாவில் ஸ்ருதிஹாசன் செய்த பதிவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சுமார் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி

அடுத்த தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் வசந்த்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் எம்பியாக இருந்த

பிக்பாஸ் டேனியல் மனைவி மற்றும் குழந்தையின் க்யூட் புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான டேனியல் மனைவி மற்றும் குழந்தை புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஸ்டாலினை அடுத்து இன்னொரு பிரபலத்திற்கும் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என்பதும் தெரிந்ததே.

கார்த்தியை அடுத்து சூர்யாவுக்கும் ஜோடியான 'கர்ணன்' நாயகி!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் சமீபத்தில் கார்த்தி நடிக்கும்