close
Choose your channels

ஏடிஎம்-இல் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

Friday, April 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா என்ற பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் நேற்று ராணுவ வீரர்கள் மூவர் பணம் எடுத்துள்ள நிலையில் அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்த விசாரணையில் மூவரும் பரோடாவில் உள்ள ஒரே ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த மூவருடன் தொடர்பில் இருந்து 28 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 3 ராணுவ வீரர்கள் பணம் எடுத்த ஏடிஎம் மையம் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரூபாய் நோட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? பரவாதா? என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏடிஎம்-இல் பணம் எடுத்ததால் கொரோனா வைரஸ் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஏடிஎம்-இல் பணம் எடுக்க செல்பவர்களும் இனி கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos