close
Choose your channels

சாராய ஊறலைக் குடித்த பள்ளி மாணவர்கள்… மருத்துவமனையில் கவலைக்கிடம்!

Friday, June 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய ஊறலைக் குடித்த 3 மாணவர்கள் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கிராமப் புறங்களில் சிலர் கள்ளச் சாராயத்தைக் காய்ச்சி விற்று வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் பெத்தநாயக்கன் குப்பம் பகுதியில் ஏரி அருகே பிளாஸ்டிக் குடங்களில் சிலர் கள்ளச் சாராய ஊறலை வைத்து இருந்த நிலையில் அதை போதைக்காக 3 மாணவர்கள் குடித்துள்ளனர்.

இதனால் அந்த மாணவர்கள் மயங்கி அதே இடத்தில் விழுந்த நிலையில் இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தற்போது மேல் சிகிச்சைக்காக அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளச்சாராய கும்பலை போலீசார் தேடிவருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.