close
Choose your channels

38 வயது ஆசிரியையை திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால் 35 வயது ஆசிரியையை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண்லால் கடந்த 1982ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகள், 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன்பிறகு வர்ணனையாளராக பணிபுரிந்தார் .

இந்த நிலையில் அருண்லாலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் வர்ணனையாளர் பணியிலிருந்து விலகி பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அவர் பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

இந்த நிலையில் ரீனா என்ற பெண்ணை திருமணம் செய்த அருண்லால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தார். தற்போது அவர் 38 வயது புல்புல் சாஹா ஆசிரியையுடன் அவர் நெருக்கமாக பழகி வந்ததாகவும் இந்த நெருக்கம் தற்போது திருமணத்தில் முடிய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

அருண்லால் வரும் மே மாதம் 2ஆம் தேதி புல்புல் சாஹாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுடைய திருமண பத்திரிகையை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.