பெரியபாண்டி குடும்பத்துக்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு திடீர் மூடல்

  • IndiaGlitz, [Friday,December 15 2017]

ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த பெரியபாண்டிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவரது மகனின் முழு கல்விச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் சிலரும், நல்ல உள்ளம் கொண்ட பலரும் பெரியபாண்டி குடும்பத்தினர்களுக்கு நிதியுதவி செய்ய விரும்பினர் இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஒரு வங்கிக்கணக்கை ஆரம்பித்து அந்த வங்கியின் முழு விபரங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த வங்கிக்கணக்கில் விருப்பம் உள்ளவர்கள் பணம் டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வங்கிக்கணக்கு குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. எனவே வீரமரணம் அடைந்த ஒரு தியாகியின் உயிர்த்தியாகத்திற்கு எந்தவித இழுக்கும் நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தற்போது அந்த வங்கிக்கணக்கை காவல்துறையினர்களே மூடிவிட்டனர். மேலும் அந்த வங்கிக்கணக்கில் யாரும் பணம் டெபாசிட் போட வேண்டாம் என்று சென்னை மாநகர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இளைஞர்களை ஊக்குவிக்க விஜய் தவறியதே இல்லை: சிபிராஜ்

சிபிராஜ் நடித்த 'சத்யா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

ரியல் தீரன் குடும்பத்தினர்களுக்கு ரீல் தீரன் ஆறுதல்

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இருந்த பெரியபாண்டியன் சமீபத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பொங்கல் விருந்தாக வெளிவருமா சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'?

விக்ரம் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வந்த 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அரசியலில் கமல் இன்னொரு சிவாஜியாக மாறக்கூடும்: தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆறுநாட்களிலும் தகுந்த பாதுகாப்பு தேவை