close
Choose your channels

ரியல் தீரன் குடும்பத்தினர்களுக்கு ரீல் தீரன் ஆறுதல்

Friday, December 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இருந்த பெரியபாண்டியன் சமீபத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரிய பாண்டியனின் வீரமரணத்திற்கு தமிழக தலைவர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்பட அனைவரும் நேற்று அஞ்சலி செய்தனர்.

இந்த நிலையில் பெரியபாண்டியனின் உடல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த பெரியபாண்டியனுக்கு இறுதியஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் கார்த்தியும் அவரது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். பின்னர் பெரியபாண்டியனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படமும் வடமாநில கொள்ளையர்களை பிடிக்கும் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.