நடிகையின் சொத்தை அபகரீக்க முயன்றதாக மன்சூர் அலிகான் மீது புகார்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பழம்பெரும் நடிகை ஒருவரின் சொத்தை அபகரிக்க முயன்றதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முதல் ஆக்சன் நடிகை என்ற புகழைப் பெற்றவர் பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணி. இவருக்கு சொந்தமான தியாகராயநகர் பத்மநாபன் தெருவில் உள்ள வீட்டை வாடகை வசூலித்து பராமரிக்க குழு ஒன்றை கடந்த 1996ஆம் ஆண்டு நீதிமன்றம் அமைத்து இருந்தது
இந்த நிலையில் இந்த சொத்தை ஆய்வுசெய்யும் நிர்வாகி சமீபத்தில் அந்த கட்டடத்தை சென்று பார்வையிட்டபோது அந்த கட்டிடத்தை நடிகர் மன்சூரலிகான் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் அதுமட்டுமின்றி அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் இடித்துவிட்டு மாற்றம் செய்ததையும் கண்டறிந்தால். உடனடியாக இதுகுறித்து அந்த நிர்வாகி தியாகராய நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.