தோல்வி அடைந்த பிரேசில் அணி நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷியா வீரரின் மகன்: நெகிழ்ச்சி வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் மிகவும் தீவிரமாக விளையாடினர்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட வாய்ப்பு கிடைத்தும் கோல் எதுவும் போடவில்லை என்ற நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் பிரேசில் அணியின் நெய்மர் மிக அபாரமாக 106 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனை அடுத்து தடுப்பு ஆட்டத்தில் மட்டும் பிரேசில் அணி வீரர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் ஆட்டம் முடிவடைய 14 எஞ்சியிருந்த நிலையில் குரோஷிய வீரர் ஒரு போல் போட்டதால் மீண்டும் சமநிலை அடைந்தது.

இந்த நிலையில் ஆட்டத்தின் முடிவை தேர்வு செய்ய பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குரோஷியா அணியினர் 4 கோல்களும், பிரேசில் அணி 2 கோல்கள் மட்டுமே போட்டதால் குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனது அணியின் தோல்வி காரணமாக கண்ணீருடன் சோகத்தில் மைதானத்தில் இருந்த போது, குரோஷியா அணியின் வீரர் விங்கர் இவான் பெரிசிச் என்பவரின் மகன் தனது தந்தை உள்பட குரோஷிய அணியினர் கொண்டாட்டத்தை கண்டுகொள்ளாமல் சோகத்தில் இருந்த நெய்மர் இடம் சென்று ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியான வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சங்கு சக்கர கண்ணு', 'புஷ்பா' பாடகியின் முதல் தமிழ்ப்பாடல்: வீடியோ வைரல்

 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற சமந்தா பாடலை பாடிய பாடகி தற்போது முதன் முதலாக தமிழில் பாடி உள்ளதை அடுத்து அந்த பாடல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நீலிமா ராணியின் க்யூட் குழந்தைகள் புகைப்படம்.. மூத்த மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா?

தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை நீலிமா ராணியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவருடைய மூத்த மகள் எவ்வளவு பெரியவராக வந்து விட்டாரா?

தனுஷின் அடுத்த பட வில்லனுக்கு ரூ.10 கோடி சம்பளமா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் வில்லனுக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் பட ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன்.. பிரபல நடிகருக்கு ரசிகை கடிதம்!

விஜய் நடித்த படத்தின் ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பிரபல நடிகருக்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'கட்டா குஸ்தி' படத்திற்காக வேற லெவலில் வொர்க்-அவுட் செய்த ஐஸ்வர்யா லட்சுமி

சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி'  என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் பட்ஜெட்டை விட இரு மடங்கு வசூல் செய்து தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள்