close
Choose your channels

விஜய் பட ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன்.. பிரபல நடிகருக்கு ரசிகை கடிதம்!

Saturday, December 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த படத்தின் ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பிரபல நடிகருக்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’தெறி’. சமந்தா எமி ஜாக்சன் உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பவன் கல்யாணின் ரசிகை ஒருவர் இந்த படத்தின் இயக்குனருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நான் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியது இல்லை. அப்படி இருக்கும்போது நான் தற்கொலை கடிதம் எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ’தெறி’ ரீமேக் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. நீங்கள் இதுபோல் ரீமேக் படத்தில் நடிக்காமல் ஒரிஜினல் படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நீ ரீமேக் படங்களில் அதிகமாக நடித்து வருவது எங்களுக்கு வலியை தருகிறது. எனவே ரசிகர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு இனி மேலாவது ஒரிஜினல் படங்களில் நடிக்கவும்.

நீங்கள் ’தெறி’ ரீமேக் படத்தில் நடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன். என்னுடைய சாவுக்குப் பிறகாவது ’தெறி’ போன்ற படத்தின் ரீமேக்கில் நடிக்கும் முயற்சியை கைவிடுவீர்கள் என நம்புகிறேன்’ என அந்த ரசிகை பவன் கல்யாணுக்கு டேக் செய்து தற்கொலை கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.