close
Choose your channels

பூகம்பத்தின் போது குடும்பத்துடன் ஜப்பானில் இருந்த பிரபல நடிகர்.. என்ன ஆச்சு?

Tuesday, January 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜப்பானில் நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பிரபல நடிகர் தனது குடும்பத்துடன் ஜப்பானில் தான் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு?என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் நேற்று திடீரென அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது என்பதும் இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை நடித்த ஜூனியர் என்டிஆர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்ட ஜப்பான் சென்று இருந்தார்.

இந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடும்பத்துடன் அங்கே இருந்த ஜூனியர் என்டிஆர் தற்போது ஹைதராபாத் திரும்பி உள்ளார். இதனை அடுத்து சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஜப்பானிலிருந்து இன்றுதான் வீடு திரும்பினேன், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் நான் என் குடும்பத்தோடு அங்கே தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். ஜப்பான் மக்களே வலிமையாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஜப்பானில் இருந்து ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக வீடு திரும்பியதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment