ஊருக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய சிறுத்தை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

வால்பாறை அருகே பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்து தாக்கிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வால்பாறை அருகே உள்ள ஒரு எஸ்டேட்டில் சத்துணவு மையத்தில் பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் தனது வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்தபோது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் அதிர்ச்சியில் மகாலட்சுமி அலறினார்

அவருடைய அலறலை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து சிறுத்தையை விரட்டி அடித்தனர். இருப்பினும் அந்த பெண்ணின் கை, கால் மற்றும் தொடை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பட்டப்பகலில் பெண் ஒருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அந்த பகுதியினர்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்குள் நுழைந்த அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என்று அந்த பகுதியினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழப்பு

நம்மூரில் ஒருசில லட்டர்பேட் அரசியல் கட்சி தலைவர்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று சென்னையில் காலமானார் அவரது மறைவு தமிழ் எழுத்துலகிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் திடீர் திருப்பம்: ஆட்சி அமைக்கின்றதா காங்கிரஸ்?

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆரம்பத்தில் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தாலும் தற்போது ஆட்சி அமைக்க தேவையான 112 என்ற எண்ணிக்கையில் வெற்றி இல்லை.

பிரகாஷ்ராஜை வம்புக்கு இழுத்த பாஜக பிரமுகர்

கர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

தென்னிந்தியாவில் நுழையும் மணியோசை: அமித்ஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, அக்கட்சி தென்னிந்தியாவில் நுழைவதற்கான மணியோசை போல் உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.