'குக் வித் கோமாளி' பார்த்து குழந்தை பிறந்தது உண்மைதான்: 10 வருடம் குழந்தையில்லாதவரின் உருக்கமான பதிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் தன்னிடம் கூறியதாக வெங்கடேஷ் பட் இந்த வார நிகழ்ச்சியில் கூறினார் என்பதையும், அதைக்கேட்டு குக்குகள், கோமாளிகளும் மட்டுமன்றி பார்வையாளர்களும் மிகப் பெரிய ஆச்சரியத்தை அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வெங்கடேஷ் பட் அவர்கள் கூறியதை வைத்து பல மீம்ஸ்கள் இணையதளங்களில் பரவி வருவதை அடுத்து 10 வருடம் குழந்தை இல்லாத ஒருவர் தனது அனுபவத்தை கூறி வெங்கடேஷ் பட் அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை என்று தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தனது சமூக வலைத்தளத்தில் நானும் என் மனைவியும் பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தோம். அதன்பிறகு டாக்டரின் அறிவுரைப்படி IVF சிகிச்சை எடுத்துக் கொண்டோம். அப்போது டாக்டர் கூறிய ஒரே விஷயம் பாசிட்டிவ் ஆக இருக்கவேண்டும், முடிந்தவரை நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் குழந்தை நன்றாக வளரும் என்று கூறினார்.

இதற்காக நான் என் மனைவியை கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொண்டேன். அவருடைய ஒரே பொழுதுபோக்காக டிவி பார்ப்பது என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க கூறினேன். வெங்கடேஷ் பட் சார் சொன்னது எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியாது, அதை பற்றி நான் பேசவும் விரும்பவில்லை. ஆனால் என் மனைவிக்கு மன அழுத்தம் இருந்த போது அதை போக்கிய ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

எனக்கு தெரிந்து உடலுறவுக்கும் கருத்தரித்தலுக்கும் உடல் வலிமையை விட மன வலிமை மிகவும் அவசியம். அந்த மனவலிமை, மனம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். மனதை சந்தோசமாக வைத்து கொள்ளாமல் மன அழுத்தத்துடன் இருந்தால் குழந்தை பிறக்காது என்பதை எனது அனுபவத்தில் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் வெங்கடேஷ் பட் சொன்னது உண்மைதான் சில மருத்துவர்களும் ஒப்புக்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். IVF சிகிச்சைக்கு கண்டிப்பாக மன அழுத்தம் இருக்கக் கூடாது என்றும் அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க பரிந்துரை செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

More News

'விக்ரம் 3' படத்தில் தளபதி விஜய்யா? கமல் அளித்த சூப்பர் பதில்!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக உலகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றி வருகிறார்

'ஆர்சி 15' படத்திற்கு பொருத்தமான டைட்டிலை தேர்வு செய்த ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்சி 15' படத்தில் ராம்சரண் தேஜா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும், கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார்

தமிழ் நடிகரின் முன்னாள் மனைவியை காதலிக்கின்றாரா பிரபல இசையமைப்பாளர்?

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தமிழ் நடிகரின் முன்னாள் மனைவியை காதலிப்பதாக கூறப்படும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் போடும் ப்ரியா அட்லி: வைரல் வீடியோ!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பாடலுக்கு பிரபல இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி தனது தோழிகளுடன் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. 

மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்த பாடகர்: திரையுலகினர் இரங்கல் 

பிரபல பின்னணி பாடகர் ஒருவர் இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரலையில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.