close
Choose your channels

கொரோனா வார்டில் பணிபுரிந்து வீடுதிரும்பிய நர்ஸ்க்கு ஆரத்தி வரவேற்பு

Monday, April 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தி அதிலிருந்து மக்களை காப்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

இந்த நிலையில் மதுரையில் கொரோனா வார்டில் பணி முடித்து வீடு திரும்பிய நர்ஸ் ஒருவருக்கு பொதுமக்கள் கை தட்டியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். மதுரை முத்துப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சுமதி என்ற நர்ஸ் அங்குள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்

தற்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சுழற்சி முறையில் பணியாற்றி வரும் அவர் பணி முடிந்து நேற்று தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அப்பகுதி மக்கள் கைதட்டியும், ஆரத்தி எடுத்தும் நர்ஸ் சுமதியை வரவேற்றனர். கொரோனாவில் இருந்து மக்கள் உயிர்பிழைக்க தன் உயிரை பணயம் வைத்து பணி செய்த அவரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.