முடிவுக்கு வந்த ஓவியாவின் அடுத்த பட படப்ப்பிடிப்பு!

  • IndiaGlitz, [Monday,March 11 2019]

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த '90ml' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து கலவையான, சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஓவியா நடித்து வந்த 'காஞ்சனா 3' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் ஓவியா சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த 'ராஜபீமா' என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது, இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ், நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேஷ் சம்பத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக ஆஷிமா நார்வல் நடித்துள்ளார். இவர் விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சைமன் கிங் இசையில் சதீஷ்குமார் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள ஓவியா, ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

More News

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்: அஞ்சலியின் அடுத்த பணி ஆரம்பம்

'இறைவி' படத்தை அடுத்து விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நடிகை அஞ்சலி, சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தார் என்பது குறித்து வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'நேர்கொண்ட பார்வை'க்கு பாடல் எழுதும் பிரபலம்

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2ஆம் பாகமாக உருவாகும் விஜய்சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம்

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல் படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: முழுவிபரம்

2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில்  அரோரா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது

வைரமுத்துவை சப்போர்ட் பண்ற அத்தனை கூமுட்டைகளும்....சின்மயியின் சர்ச்சை டுவீட்

கவியரசர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் மீடூ குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே