close
Choose your channels

'நேர்கொண்ட பார்வை'க்கு பாடல் எழுதும் பிரபலம்

Monday, March 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிங்க் ரீமேக் திரைப்படமான இந்த படத்தில் அஜித், அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபல பாடலாசிரியர், நடிகர் மற்றும் இயக்குனருமான பா.விஜய் ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்த தகவலை அவர் சமீபத்தில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பா.விஜய் கூறியதும் விண்ணைப்பிளந்த கரகோஷம் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆனது

அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.