close
Choose your channels

விவாகரத்து, ஜீவனாம்சம்: பிக்பாஸ் அபினய் மனைவி போட்ட பதிவால் பரபரப்பு

Friday, April 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் குறித்து பிக்பாஸ் அபினய் மனைவி போட்ட பதிவால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அபினய் என்பது தெரிந்ததே. ஜெமினி கணேசன் பேரனான இவர் ஆரம்பத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தாலும் திடீரென பாவனியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டார் என்பதும் கமல்ஹாசன் கூட இந்த விஷயத்தில் அபிநய்யை கண்டித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாவனியுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அபினய் மனைவி அபர்ணா கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த பிரச்சனைக்கு அபினய் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபினய் மூன்றே வாரங்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் திடீரென அபினய் மனைவி விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் பெண்களுக்கு விவாகரத்து ஆகும் போது ஜீவனாம்சம் தரவேண்டும் நிலை ஏற்படவேண்டும் என்றும் அப்போது தான் உண்மையான பாலினம் சமத்துவம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே அபினய் மற்றும் அபர்ணா இடையே விவாகரத்து என்ற வதந்தி கிளம்பி வரும் நிலையில் இப்படி ஒரு பதிவு தேவையா? என்று என் மனைவிக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.