சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்: ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,June 24 2022]

தமிழ் சினிமாவின் காமெடி ஜோடியான கவுண்டமணி - செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் செந்திலின் மகனும் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 80 களில் இருந்து பல திரைப்படங்களில் கவுண்டமணியுடனும், தனியாகவும் காமெடி வேடத்தில் கலக்கியவர் நடிகர் செந்தில். இவர் நடித்த பல திரைப்படங்களின் காமெடி காட்சிகள் இன்றும் தொலைக்காட்சிகள் பிரபலமாகி உள்ளன. குறிப்பாக ’கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ காமெடி காட்சி, சொப்பனசுந்தரி காமெடி காட்சியை ஆகியவற்றை யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் செந்திலின் மகன் மணிகண்டபிரபு சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் ’தடை உடை’ என்ற படத்தின் மூலம் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு அறிமுகமாகிறார். இந்த படத்தில் செந்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், செந்திலின் மகனாகவே மணிகண்ட பிரபு நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சினிமாவில் அறிமுகமாகும் மணிகண்ட பிரபு செந்திலின் மூத்த மகனாவார். இளைய மகன் ஹேமசந்திரா பிரபு என்பவர் ஏற்கனவே திரைப்பட இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாய்பல்லவியுடன் மீண்டும் இணைந்த சூர்யா!

சாய் பல்லவி நடித்த 'கார்கி' என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை

விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ்-ஐஸ்வர்யா ரகசிய சந்திப்பா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் ரகசியமாக சந்தித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன் போட்டோ எடுக்கும்போது விக்கி என்ன செய்கிறார் பாருங்க: வைரல் புகைப்படங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது தாய்லாந்து நாட்டில் தேனிலவில் இருக்கும் நிலையில் அவர் போட்டோ எடுக்கும்போது விக்னேஷ் சிவன் செய்த செயல் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட உதயநிதி ஸ்டாலின்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கேக் ஊட்டி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.