close
Choose your channels

தமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர்‌ சங்கத்தில்‌ திரைப்படங்களில்‌ நடிக்கும்‌ துணை நடிகர்‌, நடிகையர்கள்‌ சுமார்‌ 1500 உறுப்பினர்களும்‌ மற்றும்‌ தமிழகத்தில்‌ அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள்‌ சுமார்‌ 2000-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ உறுப்பினர்களாக உள்ளனர்‌.

தற்போது உலகம்‌ முழுவதும்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பு காரணமாக தமிழகத்தில்‌ மார்ச்‌ மாதம்‌ முதல்‌ ஏப்ரல்‌ 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது. இதனால்‌ திரைப்பட படப்பிடிப்புகளும்‌ மாவட்டங்களில்‌ நடைபெற இருந்த நாடக விழாக்களும்‌ நடைபெறாமல்‌ போனதால்‌ அதையே நம்பி இருக்கும்‌ அன்றாடம்‌ ஊதியம்‌ பெறும்‌ திரைப்படம்‌, நாடகம்‌ ஆகிய துறைகளில்‌ உள்ள கலைஞர்களின்‌ வாழ்வாதாரம்‌ மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள்‌ உட்பட அனைவரும்‌ தங்கள்‌ அடிப்படை தேவைகள்‌ கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தாங்கள்‌ இதனை கருத்திற்கொண்டு. தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம்‌ மூலம்‌ உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மேலும்‌
இக்காலகட்டத்தில்‌ தாங்கள்‌ செய்யும்‌ பேருதவி எங்களின்‌ மனதில்‌ நீங்காத இடம்‌ பெறும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இவ்வாறு நடிகர் நாசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.