close
Choose your channels

திரையுலகிலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவா? அனுஷ்கா ஷெட்டியின் திடுக் தகவல்

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக புகழ்பெற்ற நடிகைகள் முதல் அறிமுகமாகும் நடிகைகள் வரை அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. என்னிடம் யாரும் அந்த மாதிரி எண்ணத்தில் அணுகவில்லை. நான் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதால் எனக்கு இந்த அனுபவம் இல்லை என்றாலும் பிற நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் திரையுலகில் இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரு நடிகை குறுக்கு வழியில் சென்று புகழ் பெற வேண்டுமா? அல்லது கடின உழைப்பின் மூலம் புகழ் பெற வேண்டுமா என்பதை அவரே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.