close
Choose your channels

சொகுசு படகில் சென்ற பிரபல நடிகை மர்ம மரணம்: கொலையா? விபத்தா? என விசாரணை

Sunday, February 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் சொகுசு படகில் சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தா? என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை நிடா பட்சரவீரபாங் என்பவர் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் மேனேஜருடன் சொகுசுப் படகில் சுற்றுலா சென்றார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து தண்ணீரில் விழுந்ததாகவும் இதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

நடிகை நிடா பட்சரவீரபாங் படகில் இருக்கும்போது லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்தால் தான் அவர் உயிரிழக்க காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும் அவர் உயிரோடு இருக்கக் கூடாது என்பதற்காக யாரோ ஒருவர் அவரை வேண்டுமென்றே தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்து இருக்க வேண்டும் என்றும் நடிகையின் அம்மா புகார் கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் தாய்லாந்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.