ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? கஸ்தூரி சந்தேகத்தை தீர்த்த ரஜினி தரப்பினர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்தியாவிலிருந்து கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்காவுக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதற்கும் தற்போது அமெரிக்கா செல்வதையும் பார்க்கும்போது சரியாக படவில்லை என்றும் இதனை ரஜினிகாந்த் விளக்கம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மத்திய அரசிடமிருந்து மருத்துவ விலக்கு பெற்று அமெரிக்கா செல்லும் அளவுக்கு அவரது உடலுக்கு அப்படி என்ன நேர்ந்தது என்றும், இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அவரது உடலில் என்ன பாதிப்பு என்ற கேள்வியையும் நடிகை கஸ்தூரி எழுப்பி இருந்தார்.

நடிகை கஸ்தூரியின் இந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ரஜினியின் தரப்பினர் அவருக்கு விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தை அடுத்து நடிகை கஸ்தூரி சற்று முன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்களின் பதில்!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஓடிடியில் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்? வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில், ஊரடங்கு காரணமாக திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வரை சந்தித்த ஆக்சன்கிங் அர்ஜூன்!

தமிழக முதல்வராக சமீபத்தில் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பிரபல அரசியல் தலைவர்கள், தொழில்

கடற்கரை பாறையில் 'பாபநாசம்' நடிகை எஸ்தர் அனில்: வைரல் புகைப்படங்கள்! 

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே

நடிகர் திலகத்தை ஜீன்ஸ் பேண்ட்டில் பார்த்ததுண்டா? அரிய புகைப்படம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 'பராசக்தி' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 250க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும்