close
Choose your channels

23 ஆவது திருமண நாள் இன்று… மறைந்த கணவரை நினைத்து உருகும் பிரபல நடிகை!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை, தொகுப்பாளினி மற்றும் கிரிக்கெட் வர்ணணையாளராக வலம்வந்து ரசிகர்களிடையே தனி வரவேற்பை பெற்றிருந்தவர் மந்திரா பேடி. இவருடைய கணவரும் பிரபல இயக்குநருமான ராஜ் கவுஷல் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை மந்திரா பேடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் இன்று எங்களது 23 ஆவது திருமண நாள் எனப் பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூர்தர்ஷன் டிவியில் ஒளிப்பரப்பான “சாந்தி“ எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகை மந்திராபேடி. இவர் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான “மன்மதன்“ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

பின்னர் பாலிவுட் திரைப்படங்களில் வலம்வந்த இவர் ஐசிசி உலகக்கோப்பை 2003, 2007 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2004, 2006, ஐபிஎல் சீசன் 2 போன்ற போட்டிகளில் வர்ணனையாளர்களாகப் பணியாற்றினார். மேலும் பேஷன் டிசைனராகவும் அசத்தி வந்த இவர் கடந்த 1999 பிப்ரவரி 14இல் பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் கவுஷலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு கடந்த 2011 இல் ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் 2013 முதல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜ் கவுஷல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் கடும் மனஅழுத்தத்தில் இருந்துவந்த மந்திராபேடி தற்போது மாலத்தீவு போன்ற வெளியிடங்களில் அவ்வபோது தென்படுகிறார்.

மேலும் தற்போது தங்களது திருமண நாளான இன்று 23 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.