close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த நடிகை.. எமோஷனல் பதிவு..!

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் அம்மா ஷோபாவை சந்தித்ததாக எமோஷனலாக நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகை வனிதா விஜயகுமார் அறிமுகமானார் என்பதும் முதல் படத்தில் அவருக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் அதிர்ஷ்டமானவர் என்றும் அப்போது பேசப்பட்டது. அதன்பின் ஒருசில படங்களில் நாயகியாகவும், சில படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்த வனிதா விஜயகுமார் தற்போது கூட சில படங்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பார்த்திபன் இயக்கிய ’டீன்ஸ்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்த நிலையில் அதில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டார். இந்த படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா நடித்துள்ள நிலையில் வனிதா இந்த விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் தான் தளபதி விஜய்யின் அம்மா ஷோபாவை வனிதா விஜயகுமார் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ஷோபா ஆன்ட்டி அவர்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு ’டீன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்கிறேன். அவருடைய அன்பான வார்த்தைகள் மற்றும் அருமையான ஆசீர்வாதங்கள் எனக்கும் என்னுடைய மகள் ஜோவிகாவுக்கும் கிடைத்தது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.