இரட்டை இலை வழக்கு: பிரபல நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

  • IndiaGlitz, [Saturday,April 30 2022]

இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் பரிசாக கொடுத்ததாக நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன .

கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதில் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் வாங்கி தருவதாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் டிடிவி தினகரனிடம் 2 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தினகரன், சுகேஷ் சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தினகரன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே தொழிலதிபர் ஒருவரின் 200 கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது .

இந்த நிலையில் சுகேஷ் சந்திரா மோசடி செய்த பணத்தில் பல கோடிகளை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு பரிசாக கொடுத்ததாக கூறப்பட்டது. முதலில் சுகேஷ் சந்திரா என்றால் யார் என்றே தெரியாது என்று கூறிய ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதன்பிறகு இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது .

இந்த நிலையில் தற்போது அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து ஜாக்லின் பெர்னாண்டஸ்க்கு சொந்தமான 7.12 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம்: தமிழ் இயக்குனருக்கு குவியும் கண்டனம்

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்களை இயக்க மட்டும் துடிப்போம் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள நிலையில் அவருக்கு ஏராளமான

2024ல் ரிலீஸ் ஆகும் சூர்யா படத்தின் பணியை இப்போதே தொடங்கிய இயக்குனர்!

 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் சூர்யா படத்தின் பணிகளை இப்போதே அந்த படத்தின் இயக்குனர் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோடிகளை கொட்டி கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது என மறுத்த யாஷ்: குவியும் பாராட்டுக்கள்!

 யாஷ் நடித்த 'கேஜிஎப் 2'  திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது

நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் புன்னகை அரசியான லைலா தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ரசிகர்கள்

எத்தனையோ பிரமாண்டமான படம் வரலாம், ஆனால்.. நடிகர் ஜெயராம் பேட்டி!

எத்தனையோ பிரமாண்டமான படம் வரலாம், ஆனால் இதுமாதிரி ஒரு படம் இருக்காது என நடிகர் ஜெயராம் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.