close
Choose your channels

இரட்டை இலை வழக்கு: பிரபல நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் பரிசாக கொடுத்ததாக நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன .

கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதில் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் வாங்கி தருவதாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் டிடிவி தினகரனிடம் 2 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தினகரன், சுகேஷ் சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தினகரன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே தொழிலதிபர் ஒருவரின் 200 கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது .

இந்த நிலையில் சுகேஷ் சந்திரா மோசடி செய்த பணத்தில் பல கோடிகளை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு பரிசாக கொடுத்ததாக கூறப்பட்டது. முதலில் சுகேஷ் சந்திரா என்றால் யார் என்றே தெரியாது என்று கூறிய ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதன்பிறகு இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது .

இந்த நிலையில் தற்போது அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து ஜாக்லின் பெர்னாண்டஸ்க்கு சொந்தமான 7.12 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.