close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!

Monday, September 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கருண் ராமன், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் நடிகை ஷிவானியும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், கிட்டத்தட்ட அவரும் இந்த நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் அக்டோபர் நான்காம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்த உறுதி செய்யப்பட்ட செய்திகளை விரைவில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.