close
Choose your channels

நடிகை ரோஜாவா இது? வைரல் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து!

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந் நடிப்பில் எடுக்கப்பட்ட “செம்பருத்தி“ திரைப்படம் கடந்த 1992 ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ரோஜா. இதையடுத்து தன்னுடைய 30 ஆண்டு சினிமா வாழ்க்கையை அவர் நிறைவு செய்துள்ளார்.  இந்நிலையில் நடிகை ரோஜா தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

அந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு 30 வருட சினிமா அனுபவத்தைப் பார்த்து வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் “செம்பருத்தி” திரைப்படத்தில் அறிமுகமான அவர் 90களின் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக கொண்டாடப்பட்டார். பின்னர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்ட அவர் 90களில் முன்னணி நடிகையாக இருந்தபோதே தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைந்து கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

பின்பு கடந்த 2009 அம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நகரி தொகுதியில் நின்று எம்எல்ஏ வானார். அடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நகரி தொகுதியில் நின்று, அவர் மீண்டும் எம்எல்ஏவாக தேர்வாகி பொறுப்பு வகித்து வருகிறார்.

மேலும் அம்மாநிலத்தின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பொறுப்பிலும் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மாற்றியமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.